Homeசெய்திகள்அரசியல்தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு - தொழில் துறை அமைச்சர்

தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு – தொழில் துறை அமைச்சர்

-

அமைச்சரவை கூட்டத்தில் 15,610 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

 

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,
அமைச்சரவை கூட்டத்தில் 15,610 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் 8776 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பரவலாக புதிய முதலீடுகள் வர இருப்பதாக தெரிவித்த அவர், மின்னணு வாகன தயாரிப்பு, கம்பி இல்லா தொழில்நுட்ப தொழில்சாலை , ஜவுளித்துறை மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை என 8 புதிய முதலீட்டு திட்டங்கள் வர இருப்பதாகவும் கூறினார்.

மின்னனு வாகன பயன்பாட்டை ஊக்கு விக்கும் வகையில் கொள்கையில் திருத்தம் கொண்டு வருவதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் வாகனத்திற்கான சாலை வரியையும் அரசே செலுத்தும் வகையில் திருத்தும் மேற்கொள்ளபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்கண்ட தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

MUST READ