புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் இரண்டாம் பதிப்பு 1977ல் வெளிவந்துள்ளது. ஆனால் அந்த நூல் பெருவாரியான மக்களுக்கு சென்றடையாமல் முடக்கப்பட்டுள்ளது. அந்த அறிய நூலில் உள்ள தகவல்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் கவிஞர் கண்ணதாசன் எழுதியதை அப்படியே வெளியிடுகிறோம். இதில் உள்ள கருத்துகள் கவிஞர் கண்ணதாசன் அவர்களை சார்ந்தது.
ஆசிரியர்- என்.கே.மூர்த்தி.
தொடர்ச்சி ..2..
அரங்கமும் அந்தரங்கமும்
கவிஞர் கண்ணதாசன்
அந்தரங்கத்தில் ஒவ்வொரு மனிதனிடத்தும் பலவீனம் இருக்கிறது.
ஆனால், அந்த பலவீனங்களை நான் ஒப்புக்கொள்வது போல் எல்லோரும் ஒப்புக்கொள்வதில்லை.
அரங்கத்தில் ஏறி நான் உத்தம புத்திரன், சத்திய சீலன் என்று விட்டு தனிப்பட்ட வாழ்க்கையையே ஆபாசமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் பலர்.
அவர்களிலே எம்ஜிஆரும் ஒருவர்.

அவரது ரகசியங்களை நான் வெளியிடுவதற்கு காரணம் அவரது ரகசியங்களை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
ஏதோ இரண்டொரு வெற்றிகளை குருட்டு தனமாக பெற்றதிலிருந்து எம்ஜிஆரின் ஆணவம் அளவு மீறி போய்விட்டது. போய் கொண்டிருக்கிறது.
தமிழ் பெண்களை கேலி செய்கிறார். கருணாநிதி காலம் முடிந்து விட்டது என்கிறார்.
இவர்களுக்கு எல்லாம் என்ன யோக்கிதை இருக்கு என்கிறார்.
பிற மொழிகளில் இவரை ஒரு துணை நடிகராக கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
எந்த அரசியல் கட்சியிலும் இவரை ஒரு தொண்டனாக கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
இங்கே இவர்தான் பெரிய நடிகர்., அரசியல் தலைவர்.
இந்த நாட்டில் தமிழர்கள் மட்டுமே அப்பாவிகளாக இருப்பதால் இவரது ஆணவம் எல்லை மீறிப் போய் விட்டது.
இங்கே மாபெரும் தலைவர்களின் அந்தரங்கா சுத்தியை கூட அறியாதவர்கள் அவர்களை ஒதுக்கி விட்டு எம்ஜிஆரை ஆதரிப்பதால் வந்த வினை,
பெரும் தலைவர்களுக்கு அவமானமாக முடிந்திருக்கிறது.
ஆகவே தவறான உருவங்களை சிதைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
எம்ஜிஆர் கணக்கில் வாங்குவது போல் ஆறுமடங்கு பணம் கறுப்பில் வாங்குகிறார்.
ஆனால் கறுப்பு பணங்கள் கண்டு பிடிக்க வேண்டும் என்று அவரே மேடையில் பேசுகிறார்.
எந்த தொண்டனிடம் பணம் வாங்கி அவர் இன்று கட்சியையும் தேர்தல்களை நடத்துகிறார்.
இன்று சில மாமன்களும் சில மாப்பிள்ளைகளும் கேரளாவில் இருந்து வந்திருக்கும் ஒரு ஆயுதமும் தங்களிடமுள்ள கறுப்பு பணத்தையும் கொடுத்து விளையாட சொல்லி இருக்கிறார்கள்.
சுமார் இருப்பது ஆண்டுகளாக கோடிக்கணக்கில் கறுப்பு பணத்தில் விளையாடுகிறவர் அவர்.
சிரிக்கும் சிலை என்றும் குமாரதேவன் என்றும் நின்று போன பல படங்களை நீங்கள் அறிவீர்கள்.
அவற்றிலே அவர் வாங்கிய பணத்திற்கு கணக்கு உண்டா?
ஒரு மணி நேரம் கூட அவர் அந்த படத்தில் நடிக்கவும் இல்லை பணத்தை திருப்பி தரவும் இல்லை.
என்னுடைய அவசரத்துக்கு பணம் கேட்டல் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டுதான் பணம் தருவார்.
அவரது நன்கொடை என்பது அடுத்தவர்களை விலைக்கு வாங்குவதற்கே.
அனாமத்தாக அவரிடம் வந்து விழுந்த பணம் லட்சக்கணக்காகும்.
மாடி வீடு ஏழை என்ற படத்துக்காக சந்திரபாபு கொடுத்த பணத்தை அவர் திரும்பி தரவே இல்லை.
சந்திரபாபுவின் வீடு ஏலம் போய்விட்டது.
கோவையில் ஆடைகள் தைப்பவராக இருந்த ஒருவர் எம்ஜியாரை வைத்து படம் எடுத்து இன்சால்வன்சி ஆனார்.
எம்ஜிஆர் அவர் பார்க்க வந்த போது கழுத்தை பிடித்து வெளியே தள்ள சொன்னார்.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு பெண்ணின் கதை என்ற பெயரில் ஒரு படம் எடுத்து கொண்டிருந்தேன்.
அதில் நடிப்பதற்காக ஜெயலலிதாவை அந்த படத்தை பார்க்க சொன்னேன். அவர் அதைப்பற்றி எம்ஜிஆரிடம் சொல்லி இருக்கிறார்.

உடனே எம்ஜிஆர் எனக்கு போன் செய்து அந்த கதை எனக்கு வேணுமே என்றார் .
அதற்கு செலவான பணத்தை கொடுத்து விடுவதாக சொன்னார்.
மூன்றில் ஒரு பங்கு கொடுத்தார். இன்னும் பாக்கியை கொடுக்கவில்லை.
அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் சண்டை வந்துவிட்டதால் என் கழுத்தை அறுத்துவிட்டார்.
நான் அவருக்கு தரவேண்டியதை போல அவர் எனக்கு தர வேண்டியது மூன்று மடங்காகும்.
அன்றில் இருந்து இன்றுவரை அவரால் கழுத்து அறுக்கப்பட்டவர்கள் பலர்.
வெளி உலகுக்கு அவரது கொடை தெரிகிறது.
இந்த விஷயங்களும் தெரிய வேண்டாமா?
அவரால் கெட்டுப் போன சந்திரபாபு ரத்த வாந்தி எடுத்து செத்துப் போனார்?
ஏன் சந்தியாவும் (ஜெயலலிதாவின் தாயார்) அப்படித்தானே செத்துப் போனார்?

இன்னும் என்னை அவர் கொலை செய்யவில்லை. அவ்வளவுதான்.
அவரது பின்னணியில் நூற்றுக்கணக்கான பயங்கர சம்பவங்கள் அடங்கி இருக்கின்றன.
அதில இதுவும் ஒன்று.
திருவான்மியூரில் அவர் நடத்திய மாநாட்டில் இரண்டு லட்சம் ரூபாய் மிச்சம் என்றாரே? அதற்கு கணக்கு காட்ட சொல்லுங்கள் பார்ப்போம்?
அன்று காலையில் ஒரு கம்பனியில் தான் பணம் வாங்கினார் என்று சொல்லப்பட்டது.
இதுதான் அதுவா அல்லது உண்மையிலேயே வசூலானதா?
ஏதோ – தெரியாமல் கேட்கிறேன் சொல்ல சொல்லுங்கள்.
(தொடரும்)…