- Advertisement -
தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா தியானம்
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் தேமுதிக விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரனுக்கு போட்டியிட்டார்.


இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் விஜய பிரபாகரனுக்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறார்.

தேர்தல் முடிவு வெளியாவதை முன்னிட்டு தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் மறைவிற்குப் பின்பு அவரது மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 15 நிமிடங்கள் தியானம் மேற்கொண்டார்.


