Homeசெய்திகள்அரசியல்ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்- கார்த்திக் சிதம்பரம்

ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்- கார்த்திக் சிதம்பரம்

-

- Advertisement -

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார்

அதானி பிரச்சனையை மறைக்க நாடாளுமன்றத்தை நடத்தக்கூடாது என்று பாஜகவினர் திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்- கார்த்திக் சிதம்பரம்Rahul Gandhi will not apologise- Karthik Chidambaram

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் வேண்டுமானும் தனது கருத்தை எங்கு வேண்டுமாலும் பேசலாம், ஜனநாயக முறைப்படி இதற்கு யாரும் கட்டுபாடு விதிக்க முடியாது, அதனால் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என கூறினார்.

Rahul Gandhi will not apologise- Karthik Chidambaramராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்- கார்த்திக் சிதம்பரம்

நீட் விவகாரம் தமிழகத்தில் உணர்வு பூர்வமான பிரச்சனை,அதே வேளையில் மாநில பாடத்திட்டத்தில் எழுதும் தமிழக மாணவர்களுக்கு தேசிய நிலை தேர்வு தேவையா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து என தெரிவித்தார் .

மேலும் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஒரு மாநிலத்தால் மட்டும் அதனை தடை செய்ய முடியும் என்பதை என்னால் ஏற்க முடியாது, தடையை தேசிய அளவில் செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார் .

50 ஆயிரம் பேர் + 2 தேர்வை எழுதாதது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கான காரணம் குறித்து தமிழக அரசின் கல்வித் துறையும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சித்தாந்த ரீதியில் பாஜகவில் சேரவில்லை. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காததால் அவர் பாஜகவில் சேர்ந்தார். அவரை ஊடகங்கள் தான் வளர்த்து விடுகிறது. அவரை ஒரு பொருட்டாக கருத வேண்டியதில்லை என்று கூறிய கார்த்திக் சிதம்பரம், சசிகலா வலிமையான தலைவராக வருவார் என்று நான் ஏற்கனவே சொன்ன கருத்து தவறாக அமைந்துவிட்டது நான் சொல்லும் எல்லா கருத்துக்களும் அப்படியே நடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர் துணிச்சலான முடிவை எடுக்க தவறியதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் கட்சி வலிமை பெற்றுவிட்டது என்று கார்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

MUST READ