Homeசெய்திகள்அரசியல்பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்களை பற்றி என்ன தெரியும்?சீமான்

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்களை பற்றி என்ன தெரியும்?சீமான்

-

- Advertisement -

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்களை பற்றி என்ன தெரியும்?சீமான்

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார்.

Seeman - சீமான்

பேரணியில் கலந்துகொண்டு பேசிய சீமான், “ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கொடுப்பதற்கு பணம் இல்லை, ஆனால் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.4000 வரை பணம் கொடுப்பதற்கு எங்கு இருந்து பணம் வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர் பணியில் உள்ளனர். அவர்களுக்காகவும் நாம்தான் போராட வேண்டும். என்ன ஒரு வித்தியாசம்,நான் கருப்பு சட்டை போட்ட அடிமை, காவலர்கள் காக்கி சட்டை போட்ட அடிமை.

தமிழ்நாட்டில் பல இடங்களில் வட இந்தியர்களால், தமிழர்கள் தான் தாக்கப்பட்டுள்ளனர். வட இந்தியர்கள் வருகையால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை. வட இந்தியர்கள் வருகையால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. வட இந்தியர்கள் வந்தால் மாநில நுழைவுச்சீட்டு வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும்.

Why no action against people calling for violence against Hindi speakers',  asks DMK's poll strategist Prashant Kishor

வடமாநில தமிழர்கள் பற்றி பேசியதற்காக என் மீது நடவடிக்கை எடுக்க சொல்லும் பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்?” பிரசாந்த் கிஷோரை பாராட்டுகின்றேன். நீங்கள் பிகாரி, உங்கள் இனத்திற்கு உண்மையாக இருக்கிறீர்கள். அதேபோல் நான் தமிழன், என் இனத்திற்கு உண்மையாக இருக்கிறேன். இன்று கூலிக்கு வந்தவர்கள். நாளை முதலாளியாக மாறுவார்கள். \

நிலம் அவர்கள் கைகளுக்குச் செல்லும். நாம் நிலமற்ற அடிமைகளாக இருப்போம். அதனால்தான் எச்சரிக்கிறோம். வடமாநிலத்தவர்கள் வருகையை முறைப்படுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறோம்” என்றார்.

MUST READ