Homeசெய்திகள்அரசியல்குருவுக்கே துரோகமா..? எடப்பாடியாரிடம் சரணாகதி... முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்

குருவுக்கே துரோகமா..? எடப்பாடியாரிடம் சரணாகதி… முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்

-

- Advertisement -

எடப்பாடி பனிசாமியுடன் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் நெருக்கமானது எதிர் அரசியல் செய்து வந்த கட்சியினர், முன்னாள் அமைச்சர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விருந்துநகர் மாவட்ட அதிமுக செயலாளரான ராஜேந்திர பாலாஜி கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கில் இருந்தார். கட்சி நிகழ்வுகளில் ஆக்டிவாக இல்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், ராஜேந்திர பாலாஜியால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான உதயகுமார் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து, மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்.

"எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Photo: EPS

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அரசியல் செய்ய எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல் கொடுத்ததால், கிழக்கு மாவட்டத்தில் 130 புதிய நிர்வாகிகளை ராஜவர்மன் நியமித்தார். ராஜேந்திர பாலாஜியின் தீவிர விசுவாசியான சாத்தூர் நகர செயலாளர் ஒருவர் நீக்கப்பட்டார். இதனால் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜியின் அரசியல் செல்வாக்கு இறங்கு முகமாக இருந்தது.Rajendra Balaji

இதே நிலைமை நீடித்தால் மாவட்டம் நம்ம கண்ட்ரோலில் இருக்காது என ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள் பொங்கி எழவே உடனடியாக தனது ஈகோவை மறந்து கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார் ராஜேந்திர பாலாஜி. கட்சி தொடர்பான நிகழ்வுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தார். தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தார். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ஏராளமான புதிய நிர்வாகிகளையும் நியமித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் ராஜேந்திர பாலாஜி நெருக்கம் கண்டு எதிர் அரசியல் செய்த கட்சியினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்

MUST READ