சீமானுக்கு எதிராக விஜய் ஏன் குரல் கொடுக்காமல் பம்முகிறார்..? என கேள்வி எழுப்பியுள்ளார் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.
இது குறித்து அவர் எக்ஸ் தளப்பதிவில், ‘‘ஏன் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்கிறீர்கள் என அமித் ஷா சொன்னதற்கு ஆவேச பொங்கல் வைத்து அறிக்கை விடுத்தார் விஜய்.
இவருக்கு பெரியாரும் கொள்கை தலைவர்தான். அமித் ஷா ஒருமுறைதான் அம்பேத்கர் பற்றி பேசினார். ஆனால் சீமான் பெரியாரை கடுமையாக சாடி வருகிறார். இந்த நிமிடம் வரை விஜய்யிடம் இருந்து ஒரு ரியாக்சனும் இல்லை. ஒன்று கொள்கைத் தலைவர்களை மாற்றுங்கள் அல்லது பதிலடி கொடுங்கள். இப்படி கமுக்கமாக பக்கோடா சாப்பிட்டு கொண்டிருப்பது ஏன்? திராவிடமும், தேசியமும் இரு கண்கள் என குழப்புதல்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தன் ஆபீஸக்கு வர வைத்தல். ஆளுநர் பதவி தேவையில்லை என தீர்மானம் போட்டுவிட்டு.. அவரிடமே மனு அளித்தல். கேரள மருத்துவ கழிவு விவகாரம் பற்றி பேசாமல் இருத்தல். பெரியாரை இழிவாக பேசியதற்கு கருத்து சொல்லாமல் பம்முதல்.
தலைவர்களின் நினைவை போற்ற அவர்களின் சிலை அல்லது நினைவிடம் உள்ள இடத்திற்கு போகாமல் பனையூரிலேயே மலர் தூவுதல். மீடியாவை சந்திக்காமல் ஓடுதல்.
நேரடியாக ஒரு கட்சி அல்லது அதன் தலைவரின் பெயர்களை குறிப்பிடாமல் ஒன்றியம், ஆட்சியாளர் என முறுக்கு பிழிதல். நல்லா வந்தீங்க.. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த’’ என விஜயை கடுமையாக சாடியுள்ளார்.
அதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெக கட்சியின், ‘‘அமித்ஷா உள்துறை அமைச்சர். அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். சீமான் ஒரு வார்டு கவுன்சில்லர் கூட கிடையாது, அதுமட்டுமில்லாமல் தினமும் மாத்தி மாத்தி பேசும் பைத்தியத்திற்கு எதுக்கு கண்டனம் தெரிவிக்கனும். 60 கேஸ் பதிவாயிருக்கு இன்னும் கைது செய்யாமல் அரசாங்கம் என்ன செய்கிறது?’’ என கேள்வி எழுப்புகின்றனர்.