இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கைக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணியானது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலும் களம் காண்கின்றன. இதில் முதலாவது டி20 போட்டியானது பல்லகெலேவில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று 2வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இலங்கை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. அணியின் அதிகபட்சமாக குஷால் பெரேரா 53 ரன்களும் பதும் நிசாங்கா 32 ரன்களும் எடுத்தனர் . இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்தது.
பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. ஆட்டம் தொடங்கிய சில வினாடிகளில் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டமானது டக்வொர்த் விதிமுறைப்படி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் இந்திய அணி 8 ஓவர்களுக்கு 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அணியின் அதிகபட்சமாக யாஷ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 6.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 81 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.