Homeசெய்திகள்விளையாட்டுபஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி!

பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி!

-

6வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பாஃப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளஸ்சிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 8 ரன்னிலும் ஷிகர் தவான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்தார். 20 ஒவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பாஃப் டூ பிளஸ்சிஸ் 3 ரன்னிலும் விராட் கோலி 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் அணியானது எளிதாக வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 10 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்தார் . அணியின் அதிகபட்சமாக விராட் கோலி 77 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 19.2 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

MUST READ