தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்றுநர் பணியிடத்திற்கு மார்ச் 2ம் தேதி சான்று சரிபார்க்கப்பட உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுனர் பணியிடங்களுக்காக சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளம், வில்வித்தை, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வால் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வலை கோல் ஜூடோ, கபாடி, கோ-கோ, நீச்சல், டென்னிஸ், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் மற்றும் வூசு ஆகிய விளையாட்டுகளுக்கான 87 நிரந்தர பயிற்சிநூ பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பரில் நாளிதழ்களிலும், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்திலும் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

அதன்படி 530க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டன. அதில் முதல் நிலையாக அனைத்து இனங்களிலும் தகுதி பெற்ற 225 விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வுகள் கடந்த மாதம் நடைபெற்றது.
முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 189 விண்ணப்பதாரர்களுக்கு மூன்றாம் நிலை தேர்வாக வரும் மார்ச் 2ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்பகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடிதம் தபால் மூலமும் விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட உள்ளது.
எனவே, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் மார்ச் 2ம் தேதி காலை 7:00 மணிக்குள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்பகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


