spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் சிறைபிடிப்பு... இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்

-

- Advertisement -

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும், அவர்களது 3 படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்கள்  3 விசைப்படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 37 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

we-r-hiring

fishermen arrested

பின்னர் கைது செய்யப்பட்ட  37 மீனவர்களையும் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் மீனவர்கள், யாழ்ப்பாணம் மீன்வள துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 37 மீனவர்கள் ஒரே நேரத்தில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ