- Advertisement -
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் வரும் 4ஆம் தேதி வரை 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுப்போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான 3 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,508 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5.76 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, நாளை முதல் வரும் 4ஆம் தேதி வரை, தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 3,405 பேருந்துகளும் என ஆக மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள்பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க போக்குவரத்துக்கழகம் வலியுறுத்தியுள்ளது.