Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

-

- Advertisement -

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை, எலலைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப் படகுகளில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரையும் கைது செய்தனர்.

அமைச்சர் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைது

மேலும் அவர்களது 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 14 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம் காரணமாக தமிழக மீனவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

MUST READ