Homeசெய்திகள்தமிழ்நாடுசிவகாசி வெடி விபத்தில் 8 பேர் பலி - முதல்வர் இரங்கல்

சிவகாசி வெடி விபத்தில் 8 பேர் பலி – முதல்வர் இரங்கல்

-

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகாசி வெடி விபத்தில் 8 பேர் பலி - முதல்வர் இரங்கல்

கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெடி விபத்தில் 3 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் இறந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தாகவும் உடனே ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/possibility-of-ministerial-post-to-avadi-s-m-nasar-again/83709

காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு தேவையான அனைத்து கூறிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்திருக்கிறார்.

விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ