spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- தாய்மார்கள் கண்ணீர்

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- தாய்மார்கள் கண்ணீர்

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

we-r-hiring

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.6,850-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

இந்த நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.55,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.6,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், பார் வெள்ளி ரூ.1,00,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

MUST READ