Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை...

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

தமிழக முதல்வர் விஜய் குறித்து மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளாத்திகுளம்

we-r-hiring

வழக்கின் பின்னணியும் நீதிமன்ற உத்தரவும்:

முதல்வர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சில கண்டிப்பான நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்:

“இனிமேல் இதுபோல் பொதுவெளியில் பேசப்போவதில்லை” என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் உறுதியளிக்க வேண்டும். தினசரி தூத்துக்குடி காவல் நிலையம் முன்பு நேரில் சென்று ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை ஏற்பு: தென்காசியில் அரசாணையை மீறி வெளியிடப்பட்ட ரூ.2.18 கோடி மதிப்பிலான 52 டெண்டர்கள் அதிரடி ரத்து!

MUST READ