Homeசெய்திகள்தமிழ்நாடுவேலூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஏ.சி.சண்முகம்!

வேலூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஏ.சி.சண்முகம்!

-

வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் A.C. சண்முகம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் தலைவர் A.C.சண்முகம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அதே தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து போட்டியிடுகிறார். ஆனால் இந்த முறை பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

MUST READ