ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை- ஜெயக்குமார்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு ரவீந்திரநாத்தை அழைப்பதால் ஒரு தாக்கமும் ஏற்படப்போவது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இதுவரை அதிமுகவில் 1.75 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள். இன்று கடைசி நாள் என்பதால், பலரும் கட்சியின் உறுப்பினர்களாக இணைய முன்வந்துள்ளார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எடப்பாடியாருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். என்டிஏ கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட மரியாதை அனைவருக்கும் தெரியும்
ரவீந்திரநாத் அதிமுக உறுப்பினர் இல்லை என்று கடிதம் கொடுத்துள்ளோம். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு ரவீந்திரநாத்தை அழைப்பதால் ஒரு தாக்கமும் ஏற்படப்போவது இல்லை. அவரை சுயேட்சை என்கிற முறையில் அழைத்திருப்பார்கள். எதிர்கட்சிகளின் கூட்டணியில் 26 கட்சிகள், எங்கள் கூட்டணியில் 38 கட்சிகள். 26 பெரியதா? 38 பெரியதா? முதல்வருக்கு மேகதாது அணை பற்றி கவலை இல்லை. மக்களை பற்றி கவலை இல்லை. சிறைவாசியாக இருக்கும் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது வீண் செலவு. தக்காளி விலை உயர்வால், தக்காளி சாதம் கூட சமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.” என்றார்.