Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டசபையில் ஒலித்த ஏழை எம்.எல்.ஏ-க்களின் குரல்... முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு!

சட்டசபையில் ஒலித்த ஏழை எம்.எல்.ஏ-க்களின் குரல்… முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு!

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத்திற்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர்களை வழங்க முதலமைச்சர் விஜய் தீவிரமாகப் பரிசீலித்து முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டசபை

சட்டமன்றத்தில் விசிக எம்.எல்.ஏ கோரிக்கை
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) எம்.எல்.ஏ ஜோதிமணி, “எனக்குச் சொந்தமாகப் பொருளாதார வசதி கிடையாது. தொகுதி மிகவும் பெரியதாக இருப்பதால் முழுமையாகச் சென்று மக்களைச் சந்திக்கக் கார் வசதியும் இல்லை. என்னைப்போலவே இந்தச் சட்டமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஏழ்மையான நிலையிலேயே உள்ளனர். காலணி கூட அணிய முடியாத நிலையில் ஒரு உறுப்பினர் இருக்கிறார். எனவே, எம்.எல்.ஏ-க்களின் மக்கள் பணியைச் செவ்வனே செய்ய அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர்களை வழங்க வேண்டும்” என்று சபாநாயகரிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார்.

we-r-hiring

சபாநாயகர் உறுதி & முதலமைச்சரின் முடிவு
எம்.எல்.ஏ ஜோதிமணியின் கோரிக்கைக்குப் பதிலளித்த சபாநாயகர், “நமது முதலமைச்சர் மிகவும் கனிவான உள்ளம் கொண்டவர். இந்த விவகாரத்தை நிச்சயம் பரிசீலிப்பார்” எனக் கூறி, அந்த மனுவை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு அனுப்பி வைத்தார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
மனுவை பரிசீலித்த முதலமைச்சர் விஜய், இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்வாகி பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மற்றும் உதவியாளர்களை வழங்க அவர் கொள்கை அளவில் முடிவு செய்துள்ளதாகக் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!

MUST READ