Homeசெய்திகள்தமிழ்நாடுவிண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3

-

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3

எல்.வி.எம்.3 எம்- 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

Image

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான்- 3. இன்று ஏவப்பட்டுள்ள சந்திரயான்- 3 விண்கலம் ஒரு மாதத்துக்கும் மேலான பயணத்துக்கு பின் நிலவைச் சுற்றிவரும். நிலவைச் சுற்றி வந்த பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் சந்திரயான் 3 விணகலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான் 2 இறங்குவதாக இருந்த அதே இடத்தில்தான் சந்திராயன் 3 விண்கலமும் தரையிறங்குகிறது. சந்திராயன் 3 விண்கலத்தில் விக்ரம் என்ற லேண்டரும் பிரக்யான் என்ற ரோவரும் இடம்பெற்றுள்ளது.

Image

நிலவில் லேண்டர் தரையிறங்கிய பின், அதிலிருந்து ரோவர் வெளியில் வந்து நிலவின் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும். ஏதேனும் சிரமம் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து தவிர்க்கும் தொழில்நுட்பமும் விண்கலத்தில் இடம் பெற்றுள்ளது. 7 ஆய்வு கருவிகளை உள்ளடக்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் மொத்த எடை 3,900 கிலோ ஆகும். பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்துக்கு 40 நாட்களாகும். நிலவின் தென்பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

MUST READ