நடிகர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ள நிலையில், அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் வழங்கியுள்ளது.
“ஆவின் நெய் விலை உயர்வை கைவிடுக”-அண்ணாமலை ட்வீட்!
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் சீமான் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “காவல்துறை முன் நான் ஆஜராகும் போது, என் மீது புகாரளித்த விஜயலட்சுமியும் ஆஜராக வேண்டும். ஒரே நாளில், ஒரே சமயத்தில் நான், விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோரை வைத்து விசாரணை செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் மூவரையும் விசாரணை செய்து, குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிய வேண்டும்.
என் மேல் குற்றச்சாட்டு வைக்கும் விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி இருவரும் என் நேரில் நிற்க வேண்டும். இருவரின் குற்றச்சாட்டிலும் உண்மையும், அடிப்படையும் இல்லை. நான் விசாரணைக்கு வரும் போது, எனக்கு எதிராக காணொளிகளை வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள். பொதுவெளியில் என்னை பற்றி பேசி என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேலையைச் செய்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்
கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்சனைகள் இருப்பதால் ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.