தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.15) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதைச் செலுத்தினார்.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..
இந்த நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் சங்கரய்யா குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.