Homeசெய்திகள்தமிழ்நாடுரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் சீராக விநியோகம் செய்யப்படுவதை விடியா திமுக அரசு உறுதி செய்ய...

ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் சீராக விநியோகம் செய்யப்படுவதை விடியா திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் – இபிஎஸ்!

-

eps mkstalin

ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் சீராக விநியோகம் செய்யப்படுவதை விடியா திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ