spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசொத்தை பிரித்து கொடுக்காத தந்தையை படுகொலை செய்த மகன்

சொத்தை பிரித்து கொடுக்காத தந்தையை படுகொலை செய்த மகன்

-

- Advertisement -

வேதாரண்யம் அருகே சொத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

சொத்தை பிரித்து கொடுக்காத தந்தையை படுகொலை செய்த மகன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 96). இவருக்கு மூன்று மகன்களும் ,நான்கு மகள்களும் உள்ளனர். முதியவர் கோவிந்தசாமியின் மகன்கள் மூன்று பேரும் திருமணம் ஆகி தனித்தனியாக அதே ஊரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் சந்திரசேகரன் தந்தை கோவிந்தசாமி வீட்டின் அருகில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முதியவர் கோவிந்தசாமிக்கு அந்த பகுதியில் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.

we-r-hiring

இதனை பிரித்து கொடுக்குமாறு மகன் சந்திரசேகரன் அடிக்கடி கேட்டுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படி தந்தையிடம் கேட்டதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் தந்தை கோவிந்தசாமியை வீட்டில் வைத்து கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலே இறந்து விட்டார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . தந்தையை கொலை செய்த மகன் சந்திரசேகரனை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ