Homeசெய்திகள்தமிழ்நாடுUPI பயனாளா்களே…இனி ரூ.10,000க்கு மேல் பணம் அனுப்ப புதிய கட்டுபாடு - RBI அதிரடி

UPI பயனாளா்களே…இனி ரூ.10,000க்கு மேல் பணம் அனுப்ப புதிய கட்டுபாடு – RBI அதிரடி

-

- Advertisement -

ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும் போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால் UPI transaction-ஐ திரும்ப பெறலாம். இணைய திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.UPI பயனாளா்களே…இனி ரூ.10,000க்கு மேல் பணம் அனுப்ப புதிய கட்டுபாடு - RBI அதிரடிஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்கவும், பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் UPI சேவையில் ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை UPI மூலம் அனுப்பும் போது, அந்தப் பணம் பெறுநருக்குச் செல்ல 1 மணிநேரம் தாமதமாகும். இந்த “கூலிங்-ஆஃப்” (Cooling-off) காலத்தில், தவறுதலாகவோ அல்லது மோசடியாகவோ பணம் அனுப்பப்பட்டிருப்பதை உணர்ந்தால், அந்தப் பரிவர்த்தனையை பயனர் ரத்து செய்யலாம்.

ஏப்ரல் 1, 2026 முதல் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இது கட்டாயமாக்கப்பட உள்ளது. இனி UPI பின் (PIN) மட்டும் போதாது; கூடுதலாக OTP அல்லது Face ID/Biometric போன்ற ஒரு பாதுகாப்பு முறை பயன்படுத்தப்படும். ஒரு நாளைக்கு ஒரு செயலியில் அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் பார்க்க முடியும். 12 மாதங்களாகப் பயன்படுத்தப்படாத UPI ஐடிக்கள் தானாகவே முடக்கப்படும்.

we-r-hiring

பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாள் வரம்பு ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. இந்த மாற்றங்கள் குறித்த கூடுதல் தகவல்களை RBI அதிகாரப்பூர்வ தளம் அல்லது NPCI இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

MUST READ