Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை தொலைபேசி வட்டார பிஎஸ்என்எல் (BSNL) புதிய முதன்மைப் பொது மேலாளராக திரு. பி. சுதாகர...

சென்னை தொலைபேசி வட்டார பிஎஸ்என்எல் (BSNL) புதிய முதன்மைப் பொது மேலாளராக திரு. பி. சுதாகர ராவ் பொறுப்பேற்பு!

-

- Advertisement -

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) சென்னை தொலைபேசி வட்டாரத்தின் புதிய முதன்மைப் பொது மேலாளராக (Chief General Manager – CGM) திரு. பி. சுதாகர ராவ், ITS அவர்கள் இன்று (17.07.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.சென்னை தொலைபேசி வட்டார பிஎஸ்என்எல் (BSNL) புதிய முதன்மைப் பொது மேலாளராக திரு. பி. சுதாகர ராவ் பொறுப்பேற்பு!​திரு. பி. சுதாகர ராவ் அவர்கள், 1992-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய தொலைத்தொடர்பு சேவை (Indian Telecom Service – ITS) அதிகாரி ஆவார். ​தற்போதைய பொறுப்பை ஏற்கும் முன்பு, அவர் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டாரத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (Sales & Marketing) பிரிவின் முதன்மைப் பொது மேலாளராகப் (Principal General Manager) பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைத்தொடர்புத் துறையில் மிக நீண்ட மற்றும் பரந்த அனுபவம் கொண்ட இவர், கீழ்க்கண்ட பல்வேறு முக்கியப் பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்:

  • ​நவீன தொழில்நுட்ப ஸ்விட்சுகள் (New Technology Switches).
  • ​தொலைத்தொடர்பு நெட்வொர்க் திட்டமிடல் மற்றும் நிர்வாகம்.
  • ​மொபைல் கோர் நெட்வொர்க் (Mobile Core Network) இயக்கம் மற்றும் பராமரிப்பு.
  • ​மொபைல் நெட்வொர்க் திட்டமிடல் மற்றும் விற்பனை-சந்தைப்படுத்தல் பிரிவுகள்.

​பணிபுரிந்த இடங்கள்
இவர் தனது பணிக்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக,

we-r-hiring
  • ​ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம்
  • ​வடகிழக்கு மாநிலமான ஷில்லாங் (Shillong)
  • ​தெலங்கானா மாநிலம் மற்றும் தமிழ்நாடு

​தொலைத்தொடர்புத் துறையில் இவருக்கு இருக்கும் இந்த நீண்ட கால அனுபவமும், நிர்வாகத் திறனும் சென்னை தொலைபேசி வட்டாரத்தின் சேவைகளை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தத் தடை?” – அம்பேத்கர் சிலை விவகாரத்தில் திருமாவளவன் ஆவேசம்!

MUST READ