Homeசெய்திகள்தமிழ்நாடுராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை... மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திய ஏராளமான படகுகள் சேதம்!

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை… மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திய ஏராளமான படகுகள் சேதம்!

-

- Advertisement -

ராமேசுவரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைத்திருந்த ஏராளமான விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு துறைமுகத்தில் வழக்கம்போல் படகுகளை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக ஏராளமான விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. மேலும் நங்கூரம் அறுந்து சில விசைப்படகுகள் தரை தட்டின. இதனை அடுத்து, தரைதட்டி படகுகளை மீனவர்கள் மீட்டனர். சூறைக்காற்று காரணமாக விசைப்படகு மீனவர்களுக்கு 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே, ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் விட்டுவிட்டு பரவலாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

MUST READ