spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாஞ்சிபுரம் மாவட்டம் ஆதிகேசவர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதிகேசவர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;

-

- Advertisement -

காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.7.67 லட்சம்;

we-r-hiring

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின்  உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.7லட்சத்திற்கு மேல் பணமும்,தங்கம் மற்றும் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலில் தான் வைணவ மகான் இராமானுஜர் அவதரித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் திருக்கோவிலின் உண்டியல் காணிக்கை  இன்று எண்ணப்பட்டது.ஏற்கனவே சித்திரை மாத பிரம்மோற்சவம் ஆரம்பிக்கபடுவதற்கு முன்பு ஏப்ரல் 13 ஆம் தேதி  எண்ணப்பட்டது குறிப்பிடதக்கது.ஆனிமாதம் என்பதால் அக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தது குறிப்பிடதக்கது. அதன் பிறகு உண்டியலில் காணிக்கை திருக்கோவிலின் ஊழியர்களால் எண்ணப்பட்ட நிலையில்  பணமாக ரூ.7,67,438-வும், 7.1 கிராம் தங்கமாகவும்,45 கிராம் வெள்ளியாகவும்,உண்டியலின் காணிக்கையாக உள்ளது என திருக்கோவிலின் ஊழியர்கள் தெரிவித்தனர்.இந்த பணம், தங்கம்,வெள்ளி போன்ற  காணிக்கையை இந்துசமய அறநிலை துறையின் பொறுப்பு செயலாளர் கார்த்திகேயனிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும் அவர் அதனை திருக்கோவிலின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்தினார்.

MUST READ