Homeசெய்திகள்தமிழ்நாடுகொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் கேட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் கேட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

-

 

கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் கேட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

அரசியல், எதிர்க்கட்சிகள் மீதான குற்றச்சாட்டு என தீவிரமான விஷயங்கள் தேர்தல் பரப்புரையில் இடம் பெரும் நிலையில், சில நகைச்சுவை சம்பவங்களும் அரங்கேறி விடுகின்றனர்.

திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூருக்கு ஆதரவாக சாத்தூரில் பரப்புரை மேற்கொண்டார் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். கை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்ட போது, சாத்தூர் நகரின் பல இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வாக்காளர்கள் குறைகளை எடுத்துரைத்தனர்.

அதற்கு தி.மு.க.வின் நகர சேர்மன் குருசாமி, குழாய்களில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாகவே குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். உடைந்த குழாய்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பரப்புரையில் இப்படி தீவிரமான விசயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் நின்றபடி பரப்புரை மேற்கொள்ளும் தமக்கு குடிக்க தண்ணீர் கூட தர மாட்டிர்களா என நகைச்சுவையாக கேள்விகளை எழுப்பி அங்கு நிலவிய சூடான சூழலை மாற்றினார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.

MUST READ