Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!

-

 

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரையில் சித்திரை திருவிழா

நாமக்கல் மக்களவைத் தொகுதியைப் பொறுத்த வரையில் 40 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். இதற்காக 1,661 வாக்குச்சாவடி மையங்களுக்கு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தருமபுரி தொகுதியில் 888 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 2,744 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றனர்.

“1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்”- சத்யபிரதா சாஹு பேட்டி!

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

MUST READ