பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 25 ஆம் தேதி வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பரிசு தொகுப்பு இன்று வரை 85% பேர் பெற்றுள்ளதாகவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 1 கோடியே 87 லட்சத்து 14 ஆயிரத்து 464 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காதவர்கள் வருகிற 25 ஆம் தேதிக்குள் வாங்கி பயன்பெறலாம் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் குறிப்பிட்டுள்ளார்.
தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒருகிலோ அரசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்பட்டது. அத்துடன் இலவச வேட்டி – சேலைகளும் சேர்த்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.