Homeசெய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்; மக்களிடம் அதிபர் மன்னிப்பு

துருக்கி நிலநடுக்கம்; மக்களிடம் அதிபர் மன்னிப்பு

-

- Advertisement -

துருக்கி நிலநடுக்கம்; மக்களிடம் அதிபர் மன்னிப்பு

துருக்கியில் நிடுநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட, அந்நாட்டு அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன், மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

துருக்கி நாட்டில் கடந்த பிப்ரவரி 6- ஆம் தேதி ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், இதுவரை சுமார் 50,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினு, மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறவில்லை எனவும் செய்திகள் வெளியாயின.

இயற்கைப் பேரிடரிடரைத் தொடர்ந்து, மோசமான வானிலை மற்றும் சிதிலம் அடைந்த கட்டமைப்புகள் காரணமாக தங்களால் திட்டமிட்டபடி மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், அதற்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் துருக்கி அதிபர் கூறினார். நிலநடுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட அதியமான் மாகாணத்தில் மீட்புப் பணிகளை பார்வையிடும்போது, மக்களிடம் அவர் மன்னிப்பு கோரினார். அதோடு, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய குடியிருப்புகள், மருத்துவமனைகள், பூங்காக்கள் என அனைத்தும் மீண்டும் கட்டிக் கொடுக்கப்படும் என்று அதிபர் உறுதி அளித்தார்.

இருப்பினும், நிலநடுக்க பாதிப்புகளைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்படாமல் இருந்தது மற்றும் மக்களுக்குப் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாததால், துருக்கி அரசு மீது அந்நாட்டு மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

MUST READ