காலிஸ்தான் சர்ச்சையில் இந்தியா பதிலடி- கனடா தூதர் வெளியேற உத்தரவு
இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரி 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த சீக்கிய தலைவர் ஹர்திப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மோடி அரசிற்கு சம்மந்தம் உள்ளது் என குற்றஞ்சாட்டிய கனடா, இந்திய தூதரை வெளியேற்றியது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை “வடகொரியா” வைப் போல ஒரு முரட்டு நாடாக மாற்றுகிறார் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தியாவில் ஜனநாயகம் முற்றிலும் அழிந்து விட்டதாக குற்றஞ்சாட்டிய ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய தூதரை வெளியேற்றி வர்த்தக ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.
இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றியது இந்தியா. காலிஸ்தான் சீக்கிய மதத்தலைவர் நிஜ்ஜார் மரணத்தில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிய சில மணிநேரங்களிலேயே இந்தியாவின் தூதரக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.