ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு மேற்கே 8 கடல் மைல் தொலைவில் இருந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz), ஈரானுக்கு மேற்கே சுமார் 8 கடல் மைல் (8NM) தொலைவில் ஒரு சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அது நிறுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
முன்னதாக ஓமனுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மற்றொரு கப்பல் மீது ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், இன்று நடந்துள்ள இந்த இரண்டாவது தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றிக் நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கைகளை மீறிச் சென்றதாலேயே கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலவும் இந்த போர்ச் சூழலில், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் இத்தகைய தாக்குதல்கள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
போர் எதிரொலி: லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் ஈரான் கப்பல்களால் கடத்தல்
