Homeசெய்திகள்உலகம்தாய்லாந்தில் தேசிய யானைகள் தினம் கொண்டாட்டம்

தாய்லாந்தில் தேசிய யானைகள் தினம் கொண்டாட்டம்

-

- Advertisement -

தாய்லாந்தில் தேசிய யானைகள் தினம் கொண்டாட்டம்

தாய்லாந்து நாட்டில் தேசிய யானைகள் தினத்தை முன்னிட்டு, யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கியும், வழிபாடு நடத்தியும் அவை கவுரவிக்கப்பட்டன.

பண்டைய காலம் தொட்டு தாய்லாந்து கலாச்சாரத்தில் யானைகள் முக்கிய பங்காற்றிவருவதால், ஆண்டுதோறும் தேசிய யானைகள் தினத்தை அந்த நாட்டு மக்கள் கொண்டாடிவருகின்றனர். நடப்பாண்டும் அங்கு யானைகள் தின விழா களைகட்டியது. சோன்புரி மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நோங் நூச் பூங்காவில், புகழ்பெற்ற யானை சிலைக்கு முன்பாக கொண்டாட்டம் நடைபெற்றது. 26 அடி நீள மேஜையில், 3 டன் பழங்களும், காய்கறிகளும் 60 யானைகளுக்கு விருந்தாக பரிமாறப்பட்டன.

இதே போல, யானைகளுக்கு புனித நீர் தெளித்து வழிபாடு நடத்திய புத்த பிக்குகளுக்கு, யானைகள் உணவு வழங்கி ஆசிர்வாதம் செய்தது. தாய்லாந்தின் மற்றொரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், போரில் யானைகளின் பங்கை நினைவூறும் வகையில், சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. யானை மேல் அமர்ந்திருந்த வீரர்கள், சண்டைக் காட்சிகளை நடித்துக் காட்டினர்.

தாய்லாந்தின் பெருமைகளில் ஒன்றாக விளங்கும் யானைகளை பாதுகாக்க அந்த நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கடந்த 1998-ம் ஆண்டு முதல் தேசிய யானைகள் தினம் தாய்லாந்தில் கொண்டாடப்பட்டுவருகிறது.

MUST READ