Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் அவமதிக்கப்படும் மோடி!

அமெரிக்காவில் அவமதிக்கப்படும் மோடி!

-

- Advertisement -

அமெரிக்காவில் அவமதிக்கப்படும் மோடி!

பிரதமர் மோடி உரையை புறக்கணிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் எள்ளை அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ருஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் வருகையைக் குறிக்கும் வகையில் இருநாட்டு தேசிய கீதங்கள் விமான நிலையத்தில் இசைக்கப்பட்டன. அங்கு வரவேற்பு அளித்த இரண்டு சிறு குழந்தைகளிடம் இருந்து ஒரு பூங்கொத்தை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அலெக்ஸாந்திரியா அகாஸியா கார்ட்டெஸ் மோடியை காட்டமாக விமர்சித்து டிவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “மோடியின் உரையை நான் புறக்கணிக்கவிருக்கிறேன். பன்முகத்தன்மையும் சகிப்புத்தன்மையையும் ஊடக சுதந்திரத்தையும் ஆதரிக்கும் சக உறுப்பினர்களும் புறக்கணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

குஜ்ராத் கலவரம் உள்ளிட்ட சிறுபான்மையினர் விரோத செயல்களில் ஈடுபட்டதால் 2005 ஆம் ஆண்டில் அமெரிக்கா விசா மறுக்கப்பட்டவர் நரேந்திர மோடி. பிபிசி ஆவணப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது. பிபிசி அலுவலகங்களில் ரெய்டு நடத்தினார். ஊடக சுதந்திரத்துக்கான 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 161வது இடத்தில் இருக்கிறது. மேலும் கூட்டுக் கொலைகளுக்கான இடமாக இந்தியா வேகமாக மாறி வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

us

மதிப்பு வாய்ந்தவர்களுக்கும் பாராட்டப்பட வேண்டியவர்களுக்கும் மட்டும்தான் நாடாளுமன்றத்தில் கூட்டு உரைக்கு அழைக்கு விடுக்கப்பட வேண்டும். மனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களுக்கும் குறிப்பாக சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் எதிரானவராக நம் அரசு அழைப்புகளே தெரிவித்து இருக்கும் நபருக்கு அந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ