spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாலெபனானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு

லெபனானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு

-

- Advertisement -

லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

லெபனானானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை தொடர்ந்து லெபனானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் லெபனானில் இருந்து வெளியேற முடியாத இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும் மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக லெபனானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள வலைதள பதில், ” பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை லெபனானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்க கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring
காஸாவைக் குறி வைத்து கடும் தாக்குதல்!
File Photo

மேலும், அனைத்து இந்திய குடிமக்களும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும், எக்காரணம் கொண்டும் தங்கியிருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், தங்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தங்கள் மின்னஞ்சல் ஐடி மூலம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

MUST READ