spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று தொடங்கும் 'குட் பேட் அக்லி' 2-ஆம் கட்ட படப்பிடிப்பு.... ஒரே நேரத்தில் 2 படங்களில்...

இன்று தொடங்கும் ‘குட் பேட் அக்லி’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு…. ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கும் அஜித்!

-

- Advertisement -

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அந்த படப்பிடிப்பில் திரிஷா மற்றும் அர்ஜுன் ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர்.இன்று தொடங்கும் 'குட் பேட் அக்லி' 2-ஆம் கட்ட படப்பிடிப்பு.... ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கும் அஜித்!அதே சமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டான நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆக்சன் காட்சிகளுடன் இன்று (ஆகஸ்ட் 6) தொடங்குகிறது. பத்து நாட்கள் படப்பிடிப்பு அங்கு நடைபெற இருக்கிறது. அடுத்ததாக படக்குழு ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருக்கிறது. ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் பாடல் காட்சி ஒன்று ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் கசிந்திருந்தன.இன்று தொடங்கும் 'குட் பேட் அக்லி' 2-ஆம் கட்ட படப்பிடிப்பு.... ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கும் அஜித்! இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பும் ஸ்பெயினில் நடக்க இருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமானது 2024 தீபாவளியை குறி வைத்துள்ளது. குட் பேட் அக்லி திரைப்படமானது 2025 பொங்கல் தினத்தை குறி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ