இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். அதைத் தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார். மேலும் தனது லோகேஷ் சினிமா டிக்கெட் யுனிவர்ஸ் என்ற கான்செப்டின் மூலம் விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களையும் இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்ததாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். இவ்வாறு தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இனிமேல் என்ற ஆல்பத்தின் மூலம் நடிகராகவும் உருவெடுத்தார். இதைத்தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் லோகேஷ். அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக உள்ள புறநானூறு திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.