இணையத்தை கலக்கும் நானி – கீர்த்தி போஸ்ட். சமூக வளைத்தளத்தில் சிறிய கோழியை கையில் வைத்து கலக்கி வரும் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் போஸ்ட்கள்.
சினிமா உலகில் முன்னணி ஸ்டார்களாக வலம் வருபவர்கள் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் ’தசரா’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இப்படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நானி தற்போது ‘தசரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘தசரா‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்நடித்திருக்கிறார்.

மேலும், இப்படத்தில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் நானி தனது கையில் ஒரு சிறிய கோழியை வைத்து இந்த கோழியே அவருடன் இணைந்து படத்தில் நடித்திருப்பதாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
ரசிகர்கள் அந்த பதிவில் இருந்து வெளியே வரும் முன் அதே சிறிய கோழியை கையில் வைத்து கொண்டு கீர்த்தி சுரேஷ் என்னுடனும் இணைந்து நடிக்கும் இணை நடிகர், என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.