spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநான் சாப்பிடும் போது எழுந்திருக்க சொன்னார்.... 'மெய்யழகன்' படத்திற்காக சூர்யா செய்த செயல் குறித்து கார்த்தி!

நான் சாப்பிடும் போது எழுந்திருக்க சொன்னார்…. ‘மெய்யழகன்’ படத்திற்காக சூர்யா செய்த செயல் குறித்து கார்த்தி!

-

- Advertisement -

நடிகர் கார்த்தி தனது 25வது படமான ஜப்பான் படத்திற்குப் பிறகு மெய்யழகன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். நான் சாப்பிடும் போது எழுந்திருக்க சொன்னார்.... 'மெய்யழகன்' படத்திற்காக சூர்யா செய்த செயல் குறித்து கார்த்தி!இந்த படத்தில் கார்த்திவுடன் இணைந்து அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்க மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். எமோஷனல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி (நாளை) திரைக்கு வர இருக்கிறது. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்திற்காக சூர்யா செய்த செயல் குறித்து பேசி உள்ளார். நான் சாப்பிடும் போது எழுந்திருக்க சொன்னார்.... 'மெய்யழகன்' படத்திற்காக சூர்யா செய்த செயல் குறித்து கார்த்தி!“மெய்யழகன் படத்தில் அவுட் புட் நன்றாக வந்துள்ளதால் சூர்யா அண்ணா மகிழ்ச்சியாக இருக்கிறார். படத்தை பார்த்த பிறகு வீட்டிற்கு வந்தார். அப்போது நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னை எழுந்திருக்க சொல்லி கட்டியணைத்தார்.
பருத்திவீரன் படத்திற்காக அவர் என்னை கட்டியணைத்தார். இப்போது பல வருடங்கள் கழித்து மெய்யழகன் படத்திற்காக என்னை கட்டியணைத்தார்” என்று தெரிவித்துள்ளார் கார்த்தி.

MUST READ