spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுதன்முறையாக அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்.... 'அமரன்' குறித்து ராஜ்குமார் பெரியசாமி!

முதன்முறையாக அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்…. ‘அமரன்’ குறித்து ராஜ்குமார் பெரியசாமி!

-

- Advertisement -

சிவகார்த்திகேயனின் 21 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. முதன்முறையாக அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்.... 'அமரன்' குறித்து ராஜ்குமார் பெரியசாமி!ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் நாளை (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதன்முறையாக அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்.... 'அமரன்' குறித்து ராஜ்குமார் பெரியசாமி!இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் வெளியாவதாக படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ” சர்வதேச விநியோகஸ்தர் இந்த படத்தை 800 திரையரங்குகளில் வெளியிடுகிறார். இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. சிவகார்த்திகேயனின் எந்த படமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ