Homeசெய்திகள்இந்தியாவிமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால்  – ராகுல் காந்தியின் பயணம் ரத்து

விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால்  – ராகுல் காந்தியின் பயணம் ரத்து

-

- Advertisement -

ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாத காரணத்தினால் டெல்லி திரும்பியது.விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால்  – ராகுல் காந்தியின் பயணம் ரத்து

மராட்டிய மாநிலத்தில் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று தனி விமான மூலம் காலை மராட்டிய மாநிலம் புறப்பட்டார். மாட்டிய  மாநிலத்தின் சிக்லி மாவட்டத்தில் சோயாபீன் பயிர் செய்யும் விவசாயிகளை சந்திப்பதோடு அங்கு நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ராகுல்காந்தி திட்டமிட்டு இருந்தார். டெல்லியில் இருந்து புறப்பட்ட தனி விமானம் மகாராஷ்டிரா மாநிலம் சென்று தர இயங்குவதற்கு முன்னதாக லேண்டிங் கியர் வேலை செய்யாத காரணத்தினால் மீண்டும் விமானம் டெல்லிக்கு திரும்பியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் டெல்லி திரும்பியதால் தங்களை நேரில் சந்திக்க முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி மற்றும் சோயாபீன் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு போதிய விலையை பாஜக அரசு வழங்கவில்லை என வீடியோவில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு விவசாயிகளின் பிரச்சனைகளை கவனித்து உடனடியாக தீர்த்து வைக்க முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிக்லி மாவட்டத்தில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த ராகுல் காந்தியின் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வேறு விமான மூலம் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து கோண்டியா புறப்பட்டு சென்றுள்ளார்.

வாய்மொழியான கோரிக்கைகள் இனி ஏற்க முடியாது – தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா

MUST READ