spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகாய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு

காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு

-

- Advertisement -

காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு

திருத்தணி அருகே காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்-மாலா தம்பதியினர். இவர்களுக்கு கவின் என்கிற தேவகுமார்(7), ஏழில் இனியா (2) என இரு குழந்தைகள் இருந்தன. இந்நிலையில், கடந்த 8-ம் தேதி தேவகுமாருக்கு திடீரென காய்ச்சல் வந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து மறுநாள் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த, 10-ம் தேதி மாலை, 3 மணிக்கு தேவகுமார் இறந்தார்.

we-r-hiring

இந்நிலையில் நேற்று ஏழில் இனியா என்ற குழந்தைக்கு காய்ச்சல் வந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, ரத்தப்பரி சோதனை செய்தனர். அதில் ஏழில் இனியாவிற்கு டெங்கு காய்ச்சல் என தெரிய வந்தது. தொடர்ந்து, ஏழில் இனியாவை அவரது பெற்றோர் திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் செல்வகுமார் உத்தரவின் பேரில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் காசிநாதபுரம் கிராமத்தில் மருத்துவ முகாம் ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

MUST READ