தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஏராளமான கஞ்சா கடத்திவரப்படுவதாக பேராவூரணி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் உள்ள பேராவூரணி – ஊமத்தநாடு சாலையில் போலிசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்டபோது லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து சுமார் 300 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் சொகுசு காரை போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அண்ணாத்துரை (44), ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தர்மராஜ்(34), அம்மணிச்சத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா 60) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.