Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை எதிரொலி: 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எதிரொலி: 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!

-

- Advertisement -
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலியாக தமிழகத்தில் இன்று(நவ.27) 9 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகையிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறி இலங்கை கடற்கரை வழியாக தமிழ்நாடு நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் உருவாக உள்ளதை ஒட்டி தமிழகத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது. குறிப்பாக திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை

அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழை எதிரொலியாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி – கல்லூரிகளுக்கு இன்று(நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ