spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு‘முருகனுக்கு ரெண்டு... சிவனுக்கு ரெண்டு... எங்க ஆத்தா அன்னபூரணிக்கு 3 வது புருஷன் இருக்கக்கூடாதா..?’

‘முருகனுக்கு ரெண்டு… சிவனுக்கு ரெண்டு… எங்க ஆத்தா அன்னபூரணிக்கு 3 வது புருஷன் இருக்கக்கூடாதா..?’

-

- Advertisement -

முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி. சிவனுக்கு ரெண்டு பொண்டாட்டி. பெருமாளுக்கு ரெண்டு பொண்டாட்டி. இன்னும், பல கடவுளர்கள்… பல தார மணம்
முடிக்கும்போது, எங்கம்மா அன்னபூரணி மூனாவது புருஷன் கட்டிக்கக்கூடாதா? என பொங்குகிறார்கள் அன்னபூரணி அம்மாவின் அடிப்பொடிகள்.

சமூக வலைதளங்களில் வைரல் சாமியார் தான் அன்னபூரணி. இவர் தன்னை பராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறார். பளபளக்கும் பட்டுச்சேலை அணிந்து மக்களுக்கு அருள்வாக்கு சொல்வார்.

we-r-hiring

கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அடுத்தவர் கணவரோடு வாழ்ந்து வந்த விவகாரம் தொடர்பான நிகழ்ச்சியில் அன்னபூரணி கலந்து கொண்டிருந்தார். இவர் தற்போது சாமியார் அவதாரம் எடுத்திருப்பதால் பலரும் கேலியும் கிண்டலும் செய்கின்றனர். ஆனால், அதையும் தாண்டி தான் ஆன்மீக பணி செய்து வருவதாக அவர் கூறுகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் தொடங்கியுள்ளார்.

இவரது ஆசிரமத்தில் அன்னபூரணிக்கு பாதபூஜை செய்தும், மாலை அணிவித்தும், மலர்தூவியும், கற்பூரம் ஏற்றியும், தீபாராதனை காண்பித்தும் பக்தர்கள் ஆசி பெறுவது வாடிக்கையாக நடைபெறும் ஒன்று.இந்த சூழ்நிலையில் தான் அன்னபூரணி ரோகித் என்பவரை இரண்டாவதாக இன்று திருமணம் செய்துள்ளார். நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சமூகவலைதளத்தில் ஏற்கனவே கல்யாண அழைப்பிதழ் ஒன்று பரவி வந்தது.

திருமணம் குறித்து அவர் கூறுகையில், சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் இடையூறுகள் ஏற்படுவதே எனது இரண்டாவது திருமணத்துக்கு காரணம். நானும் எனது முன்னாள் கணவர் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ஆம் தேதி ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அன்னபூரணியை கேலி செய்து வருகின்றனர். அம்மனை திருமணகோலத்தில் கண்டு ஆசிர்வாதம் வாங்கிட ஆயிரக்கணக்கில் திருவண்ணாமலையிலிருந்து பக்தர்கள் வருவார்கள் என அன்னபூரணி அம்மன் காத்திருந்த நிலையில் திருமணத்திற்கு,வெறும் 30 பேர்களே வந்தனராம். அவர்கள் கூட அம்மனின் புதிய புருஷன் ரோஹித்தின் உறவினர்கள் என்கிறார்கள்.

MUST READ