டிராகன் பட நடிகை ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் கிங்ஸ்டன் திரைப்படம் வெளியானது. இது தவிர மெண்டல் மனதில், இடி முழக்கம், பிளாக் மெயில் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் இவர், ஏகே பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடிகை கயடு லோஹர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை மாரியப்பன் சின்னா எழுதி இயக்க உள்ளார். வருகின்ற மே 5ஆம் தேதி மாலை 5 மணி அளவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை கயடு லோஹர். இதைத்தொடர்ந்த இவர் சிம்புவின் 49 வது படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து புதிய படத்தில் நடிப்பது குறித்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.