இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள வடசென்னை -2 திரைப்படம் குறித்து புதிய அப்டேட்!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளிவந்த வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படி படத்தின் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.

வடசென்னை படத்தில் நடிகர் தனுஷ் தவிர, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஜெர்மியா, சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
வடசென்னை 2 படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு பதிலளித்த வெற்றிமாறன், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படபிடிப்பை முடித்த பிறகு தனுஷ் படத்தை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், வடசென்னை இரண்டாம் பாகத்தை எடுப்பதாக தெளிவுபடுத்தினார். விடுதலை 2 வெளியாகி, சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு வட சென்னை படத்தின் படபிடிப்பு தொடங்கப்படும் என தெரிவித்தார்.
2007ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் பொல்லாதவன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இப்படம் வெற்றிமாறனின் முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தாக வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் 2011ம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட் அடித்தது.
பின்னர், கொடி, வடசென்னை, அசுரன் போன்று இவர்கள் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்கள் மாபெறும் வெற்றியையும், வசூல் சாதனையும் பெற்றது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை: பாகம் 1 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காவல்துறையின் அட்டூழியத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் இப்படம், தமிழ்நாட்டின் தொடக்க வார இறுதியில் சுமார் ரூபாய். 20 கோடியை வசூலித்துள்ளது.
விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கூட்டணியில், சூரி மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.