Homeசெய்திகள்கட்டுரைராமதாஸ் Vs அன்புமணி மோதல் : யாருக்கு லாபம்? 

ராமதாஸ் Vs அன்புமணி மோதல் : யாருக்கு லாபம்? 

-

- Advertisement -

ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரத்தில் சமரசத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும், காரணம் இந்த விவகாரத்தில் ராமதாஸ் தனது பிம்பம் தான் முக்கியம் என்று நினைப்பதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாசின் செய்தியாளர் சந்திப்பின் பின்னணி மற்றும்  தந்தை – மகன் மோதலால் யாருக்கு பலன் என்பது குறித்தும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது செய்தியாளர் சந்திப்பில் ஒரு முடிவை அறிவித்துள்ளார். அப்பா செல்வதை கேட்க வேண்டும். அல்லது செயல்த் தலைவர் என்று நான் சொன்னதை அன்புமணி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியுள்ளார். ராமதாஸ் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லிவிட்டார். அன்புமணி தன்னிடம் சரணடைய வேண்டும். அல்லது நான் தான் பாமக. தொண்டர்கள், வாக்காளர்கள் எல்லாம் என் பக்கம்தான் உள்ளனர். அதை நான் நிரூபித்துக் காட்டுவேன் என்று ராமதாஸ் சொல்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நான்தான் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவேன். எந்த கூட்டணி என்று நான்தான் முடிவு செய்வேன். எல்லோரும் எதிர்பார்க்கிற கூட்டணி என்றாலும், அதிக இடங்களை வாங்கிக்காட்டுவேன் என்று சொல்கிறார்.

அன்புமணி 5.5 சதவீத வாக்குகள் வாங்கி இருக்கலாம். ஆனால் நான் நிறுத்திய அன்புமணிதான் அந்த வாக்குகளை வாங்கினார் என்று சொல்கிறார். அன்புமணி சுதந்திரமாக யோசித்து முடிவு எடுத்து செயல்படவில்லை. சவுமியா குடும்பத்தின் பிடியில் அவர் இருக்கிறார் என்று ராமதாஸ் நினைக்கிறார். நீங்கள் ஒன்றும் இல்லை. வீட்டில் இருந்து பேரக் குழந்தைகளுடன் விளையாடுங்கள், நான் அரசியல் செய்கிறேன் என்று அன்புமணி சொல்கிறார். அப்படி இல்லை. என்னை வைத்துதான் இன்றைக்கும் மக்கள் வாக்களிக்கிறார்கள். வன்னியர்களுக்கு நான் தான் அடையாளம் என்று ராமதாஸ் சொல்கிறார். பாமகவையும், ராமதாசையும் வீழ்த்தி விட்டால், வன்னியர்களின் அரசியலே வீழ்ந்துபோகும். இதை திமுக, அதிமுகவில் இருக்கிற வன்னியர்களே உணர்ந்துள்ளனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை தன்னுடன் தான் நடத்த வேண்டும் என்று ராமதாஸ் சொல்லிவிட்டார். இந்த விவகாரத்தில் அன்புமணி, சட்ட ரீதியாக சென்றால் எந்த பயனும் இல்லை. அவர் தன்னிடம் மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். அன்புமணி, ராமதாஸ் படத்துடன் பாதை யாத்திரை செல்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் ராமதாஸ், என்னை கொன்றுவிட்டு என் படத்தை எடுத்துக் கொண்டு போகிறார் என அந்த இடத்திலேயே அடித்துவிட்டார். இந்த பாதை யாத்திரை தனக்கு தொடர்பில்லாதது. தன்னை மீறி நடைபெறுகிறது என்று சொல்கிறார். மருத்துவர் ராமதாசின் முடிவு என்பது, அன்புமணி இறங்கி வந்து செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதான். முகுந்தனை ஒரு ஆளாக மாற்ற வேண்டும். 2026 தேர்தலுக்கு பின்னர் கட்சியை அன்புமணி எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறார். ராமதாசை பொறுத்தவரை, கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பேரம் பேசுவார்.

ஒன்றுபட்ட பாமக இல்லாமல், ராமதாஸ் இல்லாமல் வட தமிழகத்தில் 90 தொகுதிகளில் திமுகவுக்கு, அதிமுகவால் போட்டியிட முடியாது. பிரமேலதாவுக்கு எடப்பாடி இடம் தராததற்கும், விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடாததற்கும் அதுதான் காரணமாகும். எடப்பாடி – பாஜகவுக்கு, ராமதாஸ் வேண்டுமா? அல்லது ராமதாசுக்கு, இவர்கள் வேண்டுமா? பாமக இல்லாமல் அதிமுக போட்டியிட்டால் அவர்களால் வெற்றிபெற முடியாது. பாமக கூட்டணியால், அதிமுக 36 இடங்களில் வென்றது. ஆனால் அதிமுகவால் பாமகவுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாமக இல்லாமல் தேர்தலில் போட்டியே இல்லை. அப்போது ராமதாஸ் உங்களுக்கு தேவை.

மருத்துவர் ராமதாஸ் பாஜகவுக்கோ, பிரதமர் மோடிக்கோ எதிரானவர் இல்லை. வடதமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் வாக்குகளை கட்டுப்படுத்த முடியும். தலித் கிறிஸ்தவர்கள், இந்து தலித்களின் வாக்குகளை கட்டுப்படுத்த முடியும். அவர்களால் பொது கருத்துருவை உருவாக்க முடியும். ஊடகங்களில் கருத்துருவாக்கம் செய்பவர்கள் 90 சதவீதம் பேர் பாஜகவுக்கு எதிராக உள்ளனர். பாஜகவை பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலில் மைனஸ் தான். அதனால் மருத்துவர் ராமதாஸ் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவால் என்ன பலன் என்று பார்க்கிறார். பாஜகவுக்கு எதிர்ப்பு மலைபோல குவிந்திருப்பதாக அவர் நினைக்கிறார். ஏற்கனவே திருமாவளவன் மூலமாக ஸ்டாலின், தலித் மக்களின் வாக்குகளை திரட்டுவார். உடையார், ரெட்டியார், பிள்ளை போன்ற இடை சாதியினரிடம் பாஜக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அது இன்றைக்கும் உள்ளது.  அமைச்சர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், துரைமுருகன், லெட்சுமணன், செல்வகணபதி, ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் போன்றவர்களை வைத்து, வன்னியர் ஆதரவு நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுப்பார்.

இந்திய அளவில் பல காம்பரமைஸ்களை செய்து, மோடியை பிரதமராக்கிய ஆடிட்டர் குருமூர்த்தி பேசியும், மருத்துவர் ராமதாஸ் சமாதானம் ஆகவில்லை. இதனை அறிந்துதான் 10 குருமூர்த்திகள் சென்றாலும், தனக்கு லாபம் இல்லை என்றால் ராமதாஸ் ஏற்கமாட்டார் என்று நான் சொன்னேன். இந்த சமாதான முயற்சியில், ராமதாசுக்கு பெரிதாக என்ன கொடுத்துவிட முடியும்?. ராமதாசுக்கு தேவை அவரது பிம்பம் தான். தனது மருமகள் சவுமியா, மகனை இயக்குகிறார். அன்புமணி தன்னிடம் சரண்டர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். இந்த இடத்தில் என்ன விதமான சமாதான முயற்சியை மேற்கொள்ள முடியும்? இது கிட்டத்தட்ட மாமனார் – மருமகள் சண்டைதான். ஆடிட்டர் குருமூர்த்தி பாஜகவின் பிரதிநிதியாக தான் ராமதாசை சந்திக்க சென்றார். அன்புமணியும், ராமதாசும் ஒற்றுமையாக இருந்தால் 2029 தேர்தலில் வெற்றிபெற வசதியாக இருக்கும் அவ்வளவுதான். இதை நாங்களும் விரும்புகிறோம்.

தனது வீட்டு பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று ராமதாஸ் சொல்கிறார். தருமபுரியில் சவுமியா வெற்றி பெற்றிருந்தால், இன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்திருப்பார். அப்போது ராமதாஸ் என்ன செய்திருப்பார். அரசியல் குடும்பத்தில் இருந்தவர்கள் வந்தால், தன்னை மதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். பாமகவின் எதிர்கால வாரிசு அன்புமணி என்பதால்தான் பாமக நிர்வாகிகள் அனைவரும் அவருடன் இருக்கிறார்கள். ராமதாசை ஒதுக்கிவைத்துவிட்டு அன்புமணி அரசியல் செய்தார் என்றால் அவரை யாரும் மதிக்க மாட்டார்கள். அப்போது அன்புமணி, முதலமைச்சர் என்று தனித்து நின்று தான் ஓட்டை நிரூபிக்க வேண்டும். ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் மக்களிடையே நம்பிக்கை இன்மையை தான் ஏற்படுத்தும். ஆனால் 2026லும் வன்னியர் அரசியல் ராமதாசை சுற்றித்தான் இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ